1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
4. அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
5. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
6. யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
7. இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.
8. எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
9. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
10. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
11. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
12. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.