வெளிப்படுத்தின விசேஷம் 2:26-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

28. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

29. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 2