யோபு 40:1-4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:

2. சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.

3. அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

4. இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

யோபு 40