4. ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.
5. உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
6. சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.
7. யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
8. இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
9. செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.