13. சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
16. ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
18. பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
19. ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20. ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
21. செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
22. செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.