ஆதியாகமம் 11:11-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

12. அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.

13. சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.

15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

16. ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

18. பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.

19. ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

ஆதியாகமம் 11