10. நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11. ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
12. எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13. பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
14. காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
15. யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16. பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதா புத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.